குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படுமா?

Update: 2022-09-24 15:35 GMT

 அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் உஞ்சினி அம்பேத்கர் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீர் ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் இருப்பதால் கலங்கலாக குடிநீர் வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்