குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-09-22 11:11 GMT
கள்ளக்குறிச்சி 9-வது வார்டு ஞானம்பாள் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் மினி குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின் மோட்டார் பழுதடைந்து போனது. இதனால் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்கள் தினமும் பரிதவித்து வருகிறார்கள். எனவே பழுதான மின் மோட்டாரை சீரமைப்பதோடு ஆழ்துளை கிணற்றை தூர்வாரி தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்

மேலும் செய்திகள்