சீரான குடிநீர் வினியோகம் தேவை

Update: 2022-09-20 09:25 GMT
மரக்காணம் ஒன்றியம் வெள்ளகுளம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பொது குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் பிடித்து வருகின்றனர். ஆனால் கடந்த ஓராண்டு காலமாக குழாயில் குடிநீர் சீராக வரவில்லை. இதனால் 2 அடி பள்ளம் தோண்டி பொதுமக்கள் குடிநீர் பிடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் அங்கு குடிநீர் பிடிக்க முடியாத அளவுக்கு சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. ஆகவே இப்பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்