விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் வாருகால் வசதி கிடையாது. இதனால் மழைபெய்தால் கழிவுநீரானது சாலை வழியாக கிராம கண்மாயில் கலக்கிறது. ஆதலால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் இந்த நீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் வாருகால் வசதி அமைத்து கண்மாயை தூர்வார வேண்டும்.