திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், கல்லுப்பட்டியில் பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முறையான குடிநீர் வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி கட்டிடத்தை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சேரும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும், பள்ளிக்கு சுற்றுசுவரும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.