குடிநீர் பற்றாக்குறை

Update: 2022-09-14 13:59 GMT
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் குடிக்காடு காலனி தெருவில் வண்ணான் குட்டை என்னும் ஏரி உள்ளது.இந்த ஏரியில் இருந்து நீர் மூழ்கி மோட்டார் மூலம் இரவு நேரத்தில் திருட்டு மின்சாரம் எடுத்து ஒரு சில நபர்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக பல முறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் திருட்டு மின்சாரம் மற்றும் தண்ணீர் எடுப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்