குடிநீர் கிணறு பயன்பாட்டுக்கு வருமா

Update: 2022-09-14 12:35 GMT
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடகீரனூர் கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அங்குள்ள ஏரிக்கரை அருகே குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது. இப்பணி முடிந்து பல மாதங்கள் ஆன பின்பும் அதனை பயன்பாட்டு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஏற்பட்டு வரும் குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்கள்பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்