கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் சாலையோரம் நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டும்போது குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. குழாய் உடைந்து பல நாட்கள் ஆன பிறகும் சீரமைக்கப்படாததால் தண்ணீர் வீணாகி வருகிறது எனவே இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்.