காட்சிப்பொருளான மினி குடிநீர் தொட்டி

Update: 2022-09-12 11:59 GMT
பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவுவாயில் அருகே பொதுமக்களின் வசதிக்காக மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் குழாய் உடைப்பால் மினி குடிநீர் தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க காட்சிப்பொருளாக உள்ள மினி குடிநீர் தொட்டியை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்