விருதுநகர் அருகே வி.சுந்தரலிங்கபுரம் என்ற கருப்பம்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அதேபோல அதன் அருகில் உள்ள கழிவுநீர் பாலத்தின் மேற்பகுதி கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. கழிவுநீர் பாலத்தை சீரமைப்பதோடு சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் சீரமைக்க வேண்டும்.