கழிவுநீா் கால்வாயில் குடிநீர் குழாய்

Update: 2022-09-11 13:45 GMT
திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் அரும்பாக்கத்தில் கழிவுநீர் கால்வாய் செல்லும் இடத்தில் குடிநீர் குழாய் உள்ளது. இதில் வரும் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளதால், இதை பயன்படுத்தும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. எனவே குடிநீர் குழாயை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்