பேச்சிபாறை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குலசேகரம், சுருளோடு வழியாக பார்வதிபுரத்துக்கு அனந்தனார் கால்வாய் மூலம் வருகிறது. இந்த கால்வாயில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிலர் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால், தண்ணீர் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கால்வாயில் குளிக்கும் மக்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுத்து தண்ணீர் சுகாதாரத்தை காக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயகுமார், அருமநல்லூர்.