நிரந்தர தீர்வு காணப்படுமா?

Update: 2022-09-09 09:52 GMT

ஆத்திக்காட்டுவிளை சந்திப்பு பகுதியில் சாலையில் கூட்டுக்குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக பாய்ந்தது. பின்னர், அதிகாரிகள் குழாய் உடைப்பபை சீரமைத்தனர். ஆனால், குழாய் உடைப்பபை முறையாக சீரமைக்காகததால் மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்பட்டு மீண்டும் குடிநீர் வீணாக சாலையில் பாய்ந்து வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை முறையாக சீரமைத்து நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சூர்யா, புதூர்.

மேலும் செய்திகள்