தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-09-08 11:18 GMT
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கும்மங்குடியில் அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மழைநீர் செல்வதற்கு வடிகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் சிறிய மழை பெய்தால் கூட பள்ளி முன்பு குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இதனால் பள்ளிக்கு வரும் குழந்தைகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பள்ளியை சுற்றி மழைநீர் வடிகால் வசதி செய்து தர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்