பழுதடைந்த மின் மோட்டார்

Update: 2022-09-07 14:44 GMT

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வெற்றியூர் கிராமம், மேட்டுத்தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மின் மோட்டார் ஒன்று பழுதடைந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இதனால் தரைதொட்டியில் தண்ணீர் ஏற்றப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும் தண்ணீர் வசதி இல்லாமல் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்