குடிநீர் கிணற்றை பாதுகாக்க வேண்டும்

Update: 2022-09-06 09:18 GMT
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கீரனூர் ஏரிக்கரை அருகில் குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் இருந்து குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிக்கு ஏற்றப்பட்டு அதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கிணறு திறந்து கிடப்பதால் அதில் சிலர் மது அருந்திவிட்டு பாட்டில்களை தூக்கி வீசுவதும் , குப்பைகளை கிணற்றில் வீசி மாசு ஏற்படுத்தி வருகின்றனர். ஆகவே குடிநீர் கிணற்றிற்கு மூடி அமைத்து பாதுகாக்க வேண்டும்.

மேலும் செய்திகள்