பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா,நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு குடிநீர் தொட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த தொட்டி பழுதடைந்து உள்ளதால் தண்ணீர் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.