புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, கீழநாஞ்சூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் குடிநீருக்காக குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்திற்கு வரும் வரத்து வாய்க்கால் வழியாக இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர், மழை பெய்யும் போது அடித்து வந்து குளத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த தண்ணீரை குடிநீருக்காக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.