மதுரை மாவட்டம் சக்தி நகர், ஐயாவுத் தேவர் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிஅடைகின்றனர். மேலும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த பகுதியில் குடிநீரை சரியாக வினியோகிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.