தெருவில் தேங்கும் மழைநீரால் அவதி

Update: 2022-09-02 16:31 GMT
காட்டுமன்னார்கோவில் தாலுகா குணவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட குச்சூர் குடியிருப்புகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் மழைக்காலங்களில் தெருக்கிளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வீ்ட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளதால் பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு வடிகால் வாய்க்கால் அமைத்து தருவதோடு, தேங்கி நிற்கும் மழைநீரையும் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்