குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2022-07-11 09:26 GMT

பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள நகைக்கடையின் முன்பு மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த 2 வாரங்களாக தண்ணீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது அங்கு தண்ணீர் தேங்கி கொசுக்கள் மொய்ப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டுகிறேன்.

செந்தூர்நாதன், பாளையங்கோட்டை.

மேலும் செய்திகள்