குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-09-01 12:43 GMT
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாக்கம் புதூர் குளம் அருகே மினி குடிநீர் தொட்டி உள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் குடிநீர் பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மின்மோட்டார் பழுதடைந்ததால் மினி குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மின் மோட்டாரை உடனே சீரமைத்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்