ஆபத்தான நிலையில் குடிநீர்தேக்கத்தொட்டி

Update: 2022-08-30 10:53 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூரை அடுத்த இடையக்காடு பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்கள் வசதிக்காக குடிநீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டி முறையான பராமரிப்பின்றி முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக தொட்டியை தாங்கியுள்ள சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புகம்பிகள் வெளியே தெரிகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் நீர்தேக்கத்தொட்டியை பொதுமக்கள் அச்சத்துடன்  பயன்படுத்தி வருகின்றனர். எனவே, ஆபத்தான நிலையில் உள்ள நீர்தேக்கத்தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்