காட்சி பொருளான குடிநீர் தொட்டி

Update: 2022-08-30 09:50 GMT
புவனகிரி பேரூராட்சி 11-வது வார்டு பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அப்பகுதியில் மினிகுடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதில் உள்ள குடிநீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது சில மாதங்களாக இந்த தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க தொட்டியில் குடிநீர் நிரப்பி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்