புதருக்குள் மறைந்திருக்கும் குடிநீர் தொட்டி

Update: 2022-08-29 14:01 GMT
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், பணம்பட்டி ஊராட்சி மருந்தாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட குடிநீர் தொட்டியை சுற்றிலும் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து முட்புதர்களை அகற்றி தண்ணீர் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்