பெரம்பலூர் நகருக்கு தற்போது கொள்ளிட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக கொள்ளிடத்தில் அதிக அளவு நீர் கரைபுரண்டு ஓடுவதால் வெள்ள நீரில் மூழ்கியுள்ள கொள்ளிட குடிநீர் கிணறுகளில் இருந்து பெரம்பலூருக்கு குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் போராட்டங்களுக்கிடையே தற்போது 2 வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் துறை மங்கலம் அரணாரை மற்றும் பெரம்பலூர் டவுன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். பெரம்பலூர் நகர பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வாரம் இருமுறை குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்யநகராட்சி நிர்வாகமும், மாவட்ட கலெக்டரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.