ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி வாரச்சந்தைக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு வருவோர்களுக்கு முறையான குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகள் செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.