கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் ஊராட்சி முல்லை நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வீட்டை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் விஷப்பூச்சிகள், கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்வதற்கு மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் பள்ளி செல்லும் குழந்தைகள் தண்ணீரில் தவறி கீழே விழும் சூழ்நிலை ஏற்படுகிறது. மழைநீர் தேங்காத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், தேவசமுத்திரம், கிருஷ்ணகிரி.