பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரகுபாடி கிராமத்தில் காரை செல்லும் சாலையில் உள்ள மின்மாற்றி கடந்த 13-ந் தேதி முதல் செயல்படவில்லை. இந்த மின்மாற்றியில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் ஊருக்கு வரும் தண்ணீர் மின் மோட்டார் இயக்கப்படுகிறது. தற்போது இந்த மின்மாற்றி பழுதடைந்துள்ளதால் கடந்த சில தினங்களுக்கு மேலாக குடிநீர் வினியேகாம் வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.