புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-08-23 13:55 GMT

திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட கூத்தப்பன்குடிகாடு, மணல்மேடு ஆகிய பகுதி மக்களுக்காக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதில் இருந்து வரும் தண்ணீர் உப்பாக இருந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இது பற்றி புகார் பெட்டியிலும் செய்தி வெளியிடப்பட்டது. இது பற்றி அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தி, புதிய போர்வெல் அமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

மேலும் செய்திகள்