தஞ்சை சீனிவாசபுரம் மேற்கு தெருவில் முறையான குடிநீர் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வீட்டில் உள்ள பெண்கள், முதியவர்கள் பெரிதும் அவதியடைகின்றனர். அதுமட்டுமின்றி வீடுகளில் உள்ள இணைப்புகளிலும் முறையாக தண்ணீர் வருவதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி முறையான குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா?