குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-01-04 11:47 GMT

வேலூர் மாநகராட்சி தோட்டப்பாளையம் பகுதியில் காட்பாடி ரோட்டில் உள்ள தர்மராஜாகோவில் தெரு மரக்கடை முத்துமாரியம்மன் கோவில் அருகில் பாதாள சாக்கடை பணிகளுக்காக பள்ளம் தோண்டினார்கள். அப்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு விட்டது. அன்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யும்போதெல்லாம் குடிநீர் வீணாக வெளியேறி குளம்போல் தங்குகிறது. குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

-ம.கார்த்திகேயன், தோட்டப்பாளையம். 

மேலும் செய்திகள்