விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு காலை நேரத்தில் போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் மாணவர்கள் காலை நேரத்தில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே மேற்கண்ட வழித்தடத்தில் காலை நேரத்தில் கூடுதலாக பஸ் இயக்க வேண்டும்.