மருங்கூரில் இருந்து இரவிபுதூர் செல்லும் சாலையில் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் அருகில் பல விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், அழகனாபுரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வளைவில் வரும் வாகனங்களை விளம்பர பதாகைகள் மறைப்பதால் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பாலத்தின் அருகில் வளைவில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நீலகண்டன், மருங்கூர்.