திருச்சி மாவட்டம் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சமயபுரம் கோவில் வழியாக குமுளூர் தச்சன்குறிச்சி செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் புதூர், உத்தமனூர், நெய்குப்பை சென்று வந்தன. ஆனால் தற்போது அந்த பஸ்கள் புதூர், உத்தமனூர், நெய்குப்பை வழியாக செல்லாமல், நேராக குமுளூர் சென்று வருகிறது. இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுற்றுப்புர பகுதிகளுக்கு சென்றுவர மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பழைய வழித்தடத்திலேயே அரசு பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.