திருவெண்ணெய்நல்லூர் அருகே கண்ணாரம்பட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மலட்டாற்றில் கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக வாகனஓட்டிகள், பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அங்கு புதியதாக பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.