வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

Update: 2026-01-04 10:21 GMT

சென்னை மாநகராட்சி மண்டலம்-1, திருவெற்றியூரில் இருந்து மணலி செல்லும் வழித்தடத்தில் ரெயில்வே பாதை உள்ளது. இந்த சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகள் தற்போது உடைந்து உருதெரியாமல் காணப்படுகிறது. வேகத்தடை இல்லாத காரணத்தினால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே வேகதடைகள் அமைத்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்க துறைசார்ந்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்