தெருநாய் தொல்லை

Update: 2026-01-04 10:19 GMT

சென்னை புழல் ஒற்றவாடை தெருவில் தெருநாய் தொல்லை அதிகமாக இருக்கிறது. இரவு நேரங்களில் வேலை முடிந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பும் பெண்கள், பள்ளி முடிந்து செல்லும் மாணவர்கள் என அனைவருமே தெருநாய்களுக்கு பயந்து அச்சத்துடன் சாலையில் செல்கிறார்கள். வாகன ஓட்டிகளின் பயணம் தெருநாய்களால் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது. மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் குடியிருப்புவாசிகளின் சிரமத்தை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்