சென்னை, அயனாவரம், 97-வது வட்டம் ஏழுமலை தெருவில் விதிகளைமீறி இருசக்கர வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், தேவையில்லா சண்டைகளும் நிகழ்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.