போக்குவரத்து நெரிசல்

Update: 2025-12-14 12:37 GMT

கரூர் ஜவகர் பஜாரில் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளதால், இப்பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்நிலையில் இங்குள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே ஜவகர் பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி