பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டியில் அத்திக்குன்னா சாலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதன் அருகில் குப்பைகள் சேகரித்து வைக்கப்படுகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக நிழற்குடைக்கு வந்து செல்லும் பயணிகள் மூக்கை மூடிக்கொண்டு அவதிப்டும் நிலை உள்ளது. அவர்களுக்கு நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு குப்பைகள் சேகரித்து வைப்பதை தவிர்க்க நெல்லியாளம் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.