கோத்தகிரி நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் சாலைேயாரம் நடந்து செல்பவர்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுபோன்று வாகன ஓட்டிகளும் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே அங்கு வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும்.