சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தொளசம்பட்டியில் இருந்து தாரமங்கலம் செல்ல ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே பஸ் வசதி உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். எனவே மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதலாக பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சசிகுமார், தாரமங்கலம்.