ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை முக்கிய சாலைகளில் சிலர் மோட்டார்சைக்கிளில் அதிவேகத்தில் பயணிக்கின்றனர். இதனால் சாலையில் எதிரே வரும் மற்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சமடைந்துள்ளனர். இதுபோன்று பயணிப்பவர்களால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.