கோத்தகிரி அருகே அரவேனு பகுதியில் இருந்து மூணுரோடு, கேத்தரின் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் குறுகிய சாலையோரத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே போக்குவரத்து போலீசார் அந்த சாலையில் இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.