மதுரை திருப்பரங்குன்றம் பகுதி விளாச்சேரி கிராமம் கலைஞர் நகர் மொட்டை மலை பகுதிக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பணிக்கு செல்வோர், பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் அவசர தேவைக்கு நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல மிகவும் சிரமமடைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தடத்தில் இருந்து செல்ல கூடுதல் பஸ் வசதி அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?