அந்தியூரில் இருந்து குந்துபாயூர், ஒலகடம், குட்டமேடு, புகையிலைரெட்டியூர் வழியாக மும்மிரெட்டிபாளையம் வரை இயக்கப்பட்டு வந்த மினி பஸ் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதி கிராம மக்கள் மற்றும் ஒலகடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று பஸ் ஏறி செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே இந்த பகுதி மக்களின் நலன்கருதி மேற்கண்ட வழித்தடம் வழியாக மீண்டும் மினிபஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.