வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் கிராமத்தில் இருந்து பெரியசாமியாபுரம், ஆட்கொண்டார்குளம், தளவாய்புரம் வழியாக சங்கரன்கோவிலுக்கு பல ஆண்டுகளாக பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் வாடகை வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்கின்றனர். இதனால் அந்த கிராம மாணவ-மாணவியர், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.