திருச்சி மேலப்புலிவார் ரோடு காமராஜர் வளைவு முதல் இப்ராகிம் பூங்கா வரை மாலை, இரவு நேரங்களில் சாலையின் இரு புறமும் தற்காலிக கடைகள் அமைக்கப்படுவதுடன், வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.