அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள்

Update: 2025-06-29 11:25 GMT

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இரவு நேரங்களில் மரங்கள் வெட்டப்பட்டு லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கு முறையான அனுமதியும் பெறப்படவில்லை. அத்துடன், அதிக பாரம் ஏற்றி செல்லப்படுகிறது. இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. மேலும் சாலையும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி அனுமதியின்றி மரங்களை வெட்டி அதிக பாரத்துடன் லாரிகளில் கொண்டு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்